10 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி: கமல்நாத் உறுதி

தினமலர்  தினமலர்
10 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி: கமல்நாத் உறுதி


போபால்: தேர்தலில் கொடுத்த வாக்குறுதிபடி 10 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ம.பி. முதல்வராக தேர்வு பெற்ற கமல்நாத் கூறினார்.
ம.பி. முதல்வரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று இரவு வரை நீடித்தது. முடிவில் கமல்நாத் முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று பதவியேற்கிறார். அவருக்கு கவர்னர் ஆனந்தி பென்பட்டேல் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.இந்நிலையில் முதல்வராக தேர்வு பெற்ற பின் முதன்முறையாக டி.வி.சானலுக்கு கமல்நாத் அளித்த பேட்டி, கடந்த நவம்பரில் காங். தலைவர் ராகுல் தேர்தல் பிரசாரத்தின் போது காங். ஆட்சி அமைத்தவுடன் 10 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறினார். அதன்படி எனது தலைமையில் ஆட்சி அமைத்தவுடன் முதல் பணியாக விவசாயிகள் கடன் தள்ளுபடிசெய்ய உத்தரவிடப்படும் என்றார்.முன்னதாக பேட்டியளித்த கமல் நாதன், எனக்கு முதல்வராக வரவேண்டும் என்ற அதிகார பசி கிடையாது. ம.பி.யில் காங்.கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே எனக்குதீராத பசியாக இருந்ததுஎன்றார்.

மூலக்கதை