சென்னையில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு
சென்னை: திருவான்மியூர் பகுதியில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்துள்ளனர். வீட்டின் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் ஜோதியம்மாள், மாரியம்மாள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.