மைத்திரியின் பிடிவாதம்! மீண்டும் ஏமாற்றப்படும் ரணில்?

PARIS TAMIL  PARIS TAMIL
மைத்திரியின் பிடிவாதம்! மீண்டும் ஏமாற்றப்படும் ரணில்?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சந்தித்து கலந்துரையாடியது.
 
இந்த சந்திப்பிற்கு சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டதாக  தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை தீர்ப்பை அடுத்து கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க,நீதிமன்றின் தீர்ப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதிக்கின்றார் என தான் நம்புவதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை