இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் பிறப்பித்த உத்தரவு செல்லாது : இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தினகரன்  தினகரன்
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் பிறப்பித்த உத்தரவு செல்லாது : இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தை கலைத்தது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என இலங்கை உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து நவ.9-ம் தேதி அதிபர் சிறிசேன உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை