துருக்கியில் ரயில் விபத்தில் 9 பேர் பலி

தினமலர்  தினமலர்
துருக்கியில் ரயில் விபத்தில் 9 பேர் பலி

அங்காரா: துருக்கியில் நடந்த ரயில் விபத்தில் 9 பேர் பலியானார்கள். 50 பேர் காயமடைந்துள்ளனர்.

துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து கென்யாவிற்கு அதிவேக ரயில் கிளம்பியது. இந்த ரயில், எதிரே வந்த ரயில் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் ரயில் டிரைவர், ஊழியர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். விபத்தை தொடர்ந்து, ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. சில பெட்டிகள் உடைந்து சேதமடைந்தன. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மூலக்கதை