கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய மனித தலை!

PARIS TAMIL  PARIS TAMIL
கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய மனித தலை!

கொழும்பில் தொழிற்சாலைக்கு அருகில் நபர் ஒருவரின் தலையை பொலிஸார் மீட்டுள்ளனர். 
 
பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டு கெமுனு மாவத்தையில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு அருகில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
 
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் தலையை மீட்டுள்ளனர். 
 
குறித்த நபரின் தலையை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மூலக்கதை