பிரான்ஸ் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

தினமலர்  தினமலர்
பிரான்ஸ் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு  3 பேர் பலி

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் கிறிஸ்துமஸ் சந்தையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாயினர்.
பிரான்ஸ் நாட்டின் ஸ்டிராஸ்பர்க் நகர கிறிஸ்துமஸ் சந்தையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்கிட ஏராளமான பொதுமக்கள் குவிந்னர்.அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மர்ம நபர், மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினான். அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஒடினர். . இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாயினர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த பாதுகாப்புபடையினர் மர்ம நபரை பிடிக்க எதிர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது

மூலக்கதை