தஞ்சை பெரிய கோயிலில் ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கவில்லை : தொல்லியல் துறை பதில்

தினகரன்  தினகரன்
தஞ்சை பெரிய கோயிலில் ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கவில்லை : தொல்லியல் துறை பதில்

மதுரை : தஞ்சை பெரிய கோயிலில் ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என தொல்லியல் துறை மதுரை உயர்நீதிமன்றை கிளையில் தெரிவித்துள்ளது. பஜனை நிகைச்சி நடத்த மட்டுமே அனுமதி தரப்பட்டது எனவும், பந்தல் போடவோ , தியான நிகழ்ச்சி நடத்தவோ அனுமதி வழங்கவில்லை என தொல்லியல் துறை உதவி பாதுகாவலர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். மேலும் கோயிலில் தியான நிகழ்ச்சி நடத்த கோயில் நிர்வாகம் தான் அனுமதி அளித்தது என்றும் கூறியுள்ளார்.

மூலக்கதை