தேவாலயத் துப்பாக்கிச் சூடு! நால்வர் மரணம்

PARIS TAMIL  PARIS TAMIL
தேவாலயத் துப்பாக்கிச் சூடு! நால்வர் மரணம்

பிரேஸில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தாக்குதலை நடத்திய ஆடவரும், மேலும் 4 பேரும் மாண்டனர்.
4 பேர் காயமடைந்தனர்.
 
தாக்குதலை நடத்திய பிறகு, தாக்குதல்காரன் தன்னைத் தானே தலையில் சுட்டுக்கொண்டு மாய்த்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கேம்பினாஸ் நகரில் உள்ள Metropolitan தேவாலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
 
தாக்குதலை நடத்திய நபர், வேலின்ஹோஸ் நகரைச் சேர்ந்த, 49 வயது இயூலர் ஃபர்னாண்டோ கிரான் டோல் போ என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
மாண்டுகிடந்த தாக்குதல்காரனுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட பையில், அவனின் அடையாள ஆவணங்கள் இருந்தன.
 
தாக்குதலுக்கான நோக்கம் என்னவென்று இதுவரை தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
 

மூலக்கதை