தாய்லாந்தில் கயிற்றின் மீது யானையை நடக்க வைத்து சித்ரவதை செய்த பாகன் கைது

தினகரன்  தினகரன்
தாய்லாந்தில் கயிற்றின் மீது யானையை நடக்க வைத்து சித்ரவதை செய்த பாகன் கைது

தாய்லாந்து: தாய்லாந்து நாட்டில் மனிதர்களைப் போல கயிற்றின் மீது யானையை நடக்க வைத்து சித்ரவதை செய்த பாகன் கைது செய்யப்பட்டார். சமுத்பிரகான்  என்ற இடத்தில் உள்ள முதலைப் பண்ணை ஒன்று உள்ளது. இதில்  யானைகளுக்கு பயிற்சி பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில்  யானைகளுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி  சித்ரவதை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து வீடியோ ஒன்றும் வெளியாகி இணையதளத்தில் வைரலானது. அதில் சிறிய மேசை மேல் நிறுத்தப்பட்டிருக்கும் ஆண் யானையை அதன் பாகன் அழைத்துச் சென்று இழுத்துக் கட்டப்பட்ட இரும்புக் கயிற்றில் யானையை நடக்கவைத்து சித்ரவதை செய்வது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் அறிந்து வந்த போலீசார் யானை பாகன் மீது வழக்குப்பதிவு செய்து யானைபாகனை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக யானை பாகனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மூலக்கதை