சார்க் கூட்டத்திலிருந்து இந்தியா வெளிநடப்பு

தினகரன்  தினகரன்
சார்க் கூட்டத்திலிருந்து இந்தியா வெளிநடப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு செய்தது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில், நேற்று முன்தினம் சார்க் தொழில் வர்த்தக சபை கூட்டம் நடந்தது. இதில் ஆக்கிரமிப்பு காஷ்மீர்  அமைச்சர் சவுத்ரி முகமது சயீத்தும் கலந்து கொண்டார். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீரை இந்தியா கருதுகிறது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு எந்த அங்கீகாரத்தையும் இந்தியா கொடுக்கவில்லை. இந்நிலையில், சார்க் தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டத்தில், ஆக்ரமிப்பு காஷ்மீர் அமைச்சர் கலந்து கொண்டதால், அதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய தூதரக அதிகாரி  சுபம் சிங் அதில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

மூலக்கதை