மகளை அடித்ததால் மருமகனை கட்டி வைத்து அடித்து கொன்ற மாமனார்

தினகரன்  தினகரன்
மகளை அடித்ததால் மருமகனை கட்டி வைத்து அடித்து கொன்ற மாமனார்

சாங்கிலி : மகளை மருமகன் தாக்கியதால் ஆத்திரம் அடைந்த மாமனார் மருமகனை கட்டி வைத்து கொடூரமாக அடித்துக் கொன்றார். மகாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டம், குப்வாட் அருகில் உள்ள பசர்கி என்ற கிராமத்தை சேர்ந்தவர் தியானேஷ்வர் பாம்னே. இவரது மனைவி கீதாஞ்சலி. இவர்கள் இருவரும் கீதாஞ்சலியின் தந்தை ஊரில் நடந்த மத திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் வந்திருந்தனர். அப்போது ஒரு பிரச்னை தொடர்பாக தம்பதிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது கணவர் தியானேஷ்வர், கீதாஞ்சலியை கண்மூடித்தனமாக தாக்கினார். கீதாஞ்சலியின் தந்தை ஷிண்டே, தலையிட்டு தியானேஷ்வரை பிடித்து தூணில் கட்டி வைத்து தடியால் சரமாரியாக தாக்கினார். இதில் சுருண்டு விழுந்து தியானேஷ்வர் இறந்தார்.கணவர் தாக்கியதில் காயமடைந்த கீதாஞ்சலி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.ஷிண்டேவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மூலக்கதை