மைக்கேலுக்கு 5 நாள் காவல் நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
மைக்கேலுக்கு 5 நாள் காவல் நீட்டிப்பு

புதுடெல்லி: விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைதான இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை மேலும் 5 நாள் காவலில் விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விவிஐபிக்கள் பயணம் செய்வதற்கான ஹெலிகாப்டர் வாங்கு வது தொடர்பான விவகாரத் தில் நடந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் தொடர்புடைய இடைத்தரகர் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேலை, கடந்த 4ம் தேதி துபாய் அரசு நாடு கடத்தியது. அவரைகாவலில் வைத்து விசாரித்த சிபிஐ நேற்று மீண்டும்  டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மேலும் 5 நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அரவிந்த் குமார் அனுமதி அளித்தார். மைக்கேல் ஆஜர்படுத்தப்படுவதையொட்டி, நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மூலக்கதை