கேரளாவில் காதலனுடன் அணையை பார்க்க சென்ற பள்ளி மாணவியை மிரட்டி பலாத்காரம் தமிழக தோட்ட சூப்பர்வைசர் கைது

தினகரன்  தினகரன்
கேரளாவில் காதலனுடன் அணையை பார்க்க சென்ற பள்ளி மாணவியை மிரட்டி பலாத்காரம் தமிழக தோட்ட சூப்பர்வைசர் கைது

திருவனந்தபுரம்: பொள்ளாச்சி அருகே ஆழியார் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார்(35). இவர் பாலக்காடு அருகே முதலமடை என்ற இடத்திலுள்ள தோட்டத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன், கடந்த ஒரு வருடமாக அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன், பாலக்காடு, கொல்லங்கோடு பகுதியில் மீங்கரை அணையை சுற்றிப்பார்ப்பதற்காக ஒரு வாலிபரும், பள்ளி மாணவியான அவரது காதலியும் வந்தனர். அப்போது அந்த அணையில் சரவணகுமார் மீன் பிடித்து கொண்டிருந்தார். அவர்களை பார்த்த சரவணக்குமார், தான் அணை காவலாளி என்றும், இங்கு இருக்கக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். பின்னர் 2 பேரிடம் இருந்தும் செல்போனை பறித்துவிட்டு, அருகில் உள்ள பப்பான்சல்லை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் சரவணக்குமார் செல்போனை திரும்பி ெகாடுத்து வாலிபரை பைக்கில் செல்லுமாறு கூறினார். பின்னர் மாணவியை பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தார்.இதைத்தொடர்ந்து பஸ்சை பைக்கில் பின்தொடர்ந்த சரவணக்குமார், பைக்கை நிறுத்திவிட்டு அந்த பஸ்சில் ஏறினார். பின்னர் மாணவியிடம் உனது காதலனை போலீஸ் பிடிக்காமல் இருக்க பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கிறேன். நாம் அங்கு செல்லலாம் என கூறி, தனது பைக்கில் மாணவியை அழைத்து சென்றார். அப்போது மாணவியின் செல்போனை வாங்கி சுவிட்ச் ஆப் செய்துள்ளார். தொடர்ந்து அருகில் உள்ள கரடிக்குன்று என்ற இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கு ஆளில்லாத இடத்தில் வைத்து மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு, அவரது கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்துள்ளார். அதன்பின் மாணவியை பைக்கில் ஏற்றி எம்.புதூர் பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவி செல்போனில் தனது காதலனை தொடர்புக் கொண்டு விவரத்தை கூறியுள்ளார். அங்கு வந்த காதலன் மாணவியை அழைத்து கொண்டு ஊருக்கு சென்றார். பின்னர் இதுதொடர்பாக இருவரும் மீனாட்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் நடந்த இடம் கொல்லங்கோடு என்பதால், கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறினர். அதன்படி கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சரவணக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மூலக்கதை