சூடானில் ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலி
கார்டோம்: சூடான் நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலியானார்.
ஆப்ரிக்க நாடான சூடான் நாட்டின் மாகாண கவர்னர் மிர்ஹாகினி சலேஹ் கடந்த ஞாயிறன்று விவசாய நிலங்களை பார்வையிட தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்றார். எத்தியோபியா எல்லை அருகே கடாரிப் என்ற இடத்தில் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்ததில் கவர்னர் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.