எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற ராஜபக்சே: அதிபர் பகீர்

தினமலர்  தினமலர்
எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற ராஜபக்சே: அதிபர் பகீர்

கொழும்பு: இலங்கை பார்லிமென்ட்டில் பெரும்பான்மையை நிரூபிக்க, மஹிந்த ராஜபக்சே, எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று அந்நாட்டு அதிபர் மைதிரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார்.

தோல்விக்கு காரணம் என்ன?


இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இடையே மோதல் உருவானது. இதை தொடர்ந்து விக்கரமசிங்கேவுக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் என அதிபர் சிறிசேன அறிவித்தார். இதன் பின் இந்த விவகாரம், பார்லிமென்ட் கலைப்பு, கலைப்புக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தடை, பார்லிமென்ட்டில், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி என அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்தன. இந்த சூழ்நிலையில், அதிபர் சிறிசேன 'டெய்லி மிரர்' என்ற இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பார்லிமென்ட்டில் பெரும்பான்மை நிருபிக்க, 113 எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. எனவே, தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் தோல்வி அடைந்தார். எம்.பி.,க்கள் அளவுக்கு அதிகமாக லஞ்சம் கேட்டதே, ராஜபக்சேவின் தோல்விக்கு காரணம். சில எம்.பி.,க்கள் 50 கோடி வரை கேட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. அந்த அளவுக்கு பெரிய தொகை ராஜபக்சேவிடம் இல்லை. பணம் இருந்திருந்தால் அவர் வெற்றி பெற்று இருப்பார். ஆனால், வெற்றி பெற்று இருந்தால், இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சிக்கல் நீடித்து இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை