காவிரியில் தமிழகத்திற்கு அதிக உரிமை உள்ளது: முதலமைச்சர் பழனிசாமி
சென்னை: காவிரியில் தமிழகத்திற்கு அதிக உரிமை உள்ளது என சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். காவிரி ஒப்பந்த ஷரத்துக்களை மீறும் வகையில் கர்நாடக அரசின் செயல் உள்ளதாக முதல்வர் தெரிவித்தார். பாசன பகுதிகளை கர்நாடகா 27 லட்சம் ஹெக்டேர் வரை உயர்த்தி உள்ளது எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.