மகனை தேடிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி! வவுனியாவில் சம்பவம்

PARIS TAMIL  PARIS TAMIL
மகனை தேடிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி! வவுனியாவில் சம்பவம்

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

 
நேற்று மாலை குறித்த சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
 
வீட்டில் இருந்த தனது மகனை நீண்டநேரமாக காணவில்லை என்று அவரது தாயார் எல்லா இடமும் தேடியுள்ளார். 
 
இதன் போதே கிணற்றினுள் சடலமாக இருந்தமை கண்டுபிடிக்கபட்டது.
 
பின்னர் தகவல் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கபட்டுள்ளது.
 
குறித்த சம்பவத்தில் செல்வம் வயது 40 என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

மூலக்கதை