விதையாய் இருந்தவரை இழந்து விட்டோம் : விஷால்

தினமலர்  தினமலர்
விதையாய் இருந்தவரை இழந்து விட்டோம் : விஷால்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் சென்னையில் காலமானார். இவருக்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

இயற்கை விவசாய போராளி வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நெல் ஜெயராமன். மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவரும், 170க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட சாதனை மனிதர்.

பாரம்பரிய நெல் விதைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், விவசாயத்தில் ஆர்வம் காட்டும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் எடுத்துச் செல்வதில் மிக மிக முக்கியமானவர். நெல் ஜெயராமன் அவரது மறைவு ஒட்டுமொத்த விவசாய மக்களுக்கு பேரிழப்பு. நெல் ஜெயராமன் அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை