மெக்கா மசூதியில் பெண்கள் செய்த காரியம்!

PARIS TAMIL  PARIS TAMIL
மெக்கா மசூதியில் பெண்கள் செய்த காரியம்!

மெக்கா மசூதியில் இஸ்லாம் பெண்கள் விளையாடிக் கொண்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
இஸ்லாமியர்களின் புனித தலமான கருதப்படுவது மெக்கா மசூதி. உலகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் இங்கு புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.
 
இந்த மசூதி வளாகத்தில் புர்கா அணிந்திருந்த பெண்கள் நால்வர் தரையில் அமர்ந்து போர்ட் கேம் விளையாடும் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதற்கு இஸ்லாமியர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இதற்கு விளக்கம் அளித்துள்ள சவுதி அரேபிய அரசு, ‘கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணி அளவில் மெக்கா வளாகத்துக்குள் பெண்கள் விளையாடிக்கொண்டிருந்திருக்கின்றனர். இதனையடுத்து மசூதி பாதுகாவலர்கள் அங்கு விளையாடக் கூடாது என்று கூறியதும் அவர்கள் கலைந்து சென்றுவிட்டனர்’ என்று கூறியுள்ளது.

மூலக்கதை