ரோடோமேக் பேனா நிறுவனர் விக்ரம் கோத்தாரிக்கு 11 நாள் சிபிஐ காவல்

தினகரன்  தினகரன்

டெல்லி: வங்கிமோசடி வழக்கில் கைதான ரோடோமேக் பேனா நிறுவனர் விக்ரம் கோத்தாரிக்கு 11 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் விக்ரம் கோத்தாரியின் மகன் ராகுல் கோத்தாரியையும் காவலில் வைக்க லக்னோ சிபிஐ நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. வங்கியில் ரூ.3,695 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக விக்ரம் கோத்தாரி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை