சைக்கிளில் சென்ற இளம்பெண் மீது தீ வைத்த கும்பல்
உன்னோ : உத்தரப் பிரதேசத்தில் சைக்கிளில் தனியாக சென்ற பெண் மீது மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் காட்டின பாலாகேடா கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பண். இவர் நேற்று முன்தினம் சைக்கிளில் கடைக்கு சென்றார்.அப்போது, ஆள்நாடமாட்டம் இல்லாத பகுதியில் இளம்பெண் வந்தபோது அவர் மீது எரிபொருளை ஊற்றிய மர்ம கும்பல் தீவைத்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.