காஷ்மீரில் பனிச்சரிவு அபாயம் அதிகாரிகள் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்

ஜம்மு : காஷ்மீரின் சில பகுதிகளில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வு நிறுவனத்தின் தகவலின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, குல்மார்க், பர்க்கியன் காலி, கார்கில் மற்றும் லே மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும், கார்கில் மற்றும் பந்திப்போரா, நகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட உயரமான பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த அளவிலான பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது,  இதேபோல, லடாக்கின் கார்கில், லே, பூன்ச், ரஜெளரி, ரீசி, ராம்பன், டோடா, கிஷ்ட்வார் மற்றும் உதம்பூர் பகுதிகளிலும் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை