சுனந்தா புஷ்கர் சாவு டெல்லி போலீசார் பதிலளிக்க உத்தரவு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் குறித்து விளக்கம் அளிக்கும்படி டெல்லி போலீசாருக்கு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் தொடர்பாக பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,”இந்த குற்றச்சாட்டின் தகுதி குறித்து பார்ப்பதற்கு முன்பாக மனுவின் முகாந்திரம் குறித்து நீதிமன்றம் திருப்தி அடைவது அவசியம். ஆகவே, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முகாந்திரம் பற்றி முதலில் வாதிடுங்கள்’’ என உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

மூலக்கதை