எல்லை கட்டுப்பாடு பகுதியில் 6 நாட்டு தளபதிகள் பார்வை

தினகரன்  தினகரன்

இஸ்லாமாபாத் : இந்தியாவின் அத்துமீறலை தெரிந்து கொள்வதற்காக 6 நாட்டு படைத் தளபதிகளை எல்லை கட்டுப்பாட்டுகோடு பகுதிக்கு பாகிஸ்தான் அழைத்து சென்றது. இந்த ஆண்டு இந்திய படைகள் 335 முறை அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் இதில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. நேற்று பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் துருக்கி இந்தோனேசியா நாட்டின் படை தளபதிகளை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள ரவால்காட்டுக்கு அழைத்து சென்றோம். அங்கு இந்தியா ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து விளக்கப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது. 

மூலக்கதை