போட்டியே இல்லாத களத்தில் ரஜினியின் காலா

தினமலர்  தினமலர்
போட்டியே இல்லாத களத்தில் ரஜினியின் காலா

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. ஏப்ரல் 27-ந்தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. ஆனால், தெலுங்கில் ஏப்ரல் 27-ந்தேதி அன்று மகேஷ்பாபுவின் பாரத் அனே நேனு, அல்லு அர்ஜூனின் நா பேரு சூர்யா ஆகிய படங்களும் வெளியாவதாக இருந்தது.

இரண்டு மெகா படங்கள் ஒரே நாளில் வெளியானால் படங்களின் வசூல் பாதிக்கும் என்று தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் படங்களின் தயாரிப்பாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. முதலில் இருவருமே விட்டுக்கொடுக்காத நிலையில், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பட்டுள்ளனர்.

அதாவது, மகேஷ்பாபு நடித்துள்ள பாரத் அனே நேனு படத்தை ஏப்ரல் 20-ந்தேதியும், அல்லு அர்ஜூனின் நா பேரு சூர்யா படத்தை மே 4-ந் தேதியும் வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆக, ஏப்ரல் 27-ந்தேதி தெலுங்கிலும் வெளியாகும் ரஜினியின் காலா படத்திற்கு இந்த படங்களினால் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்பட்டு வந்த நிலையில், தற்போது போட்டியே இல்லாத களத்தில் களமிறங்குகிறார் காலா.

மூலக்கதை