போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்திய பெண் விமானிக்கு அமெரிக்க எம்பி பாராட்டு

தினகரன்  தினகரன்

வாஷிங்டன் : இந்தியாவின் முதல் பெண் விமானிக்கு அமெரிக்காவின் முன்னாள் பெண் விமானியும், தற்போதைய எம்பி.யுமான மார்த்தா மெக்சாலி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் பெண் விமானியாக பொறுப்பேற்ற அவானி சதுர்வேதி, கடந்த திங்கட்கிழமை குஜராத் மாநில ஜாம்நகர் விமான படைத்தளத்தில் இருந்து எம்ஐஜி-21 ரக போர்விமானத்தை தனியாக ஓட்டிச் சென்றார். இதன்மூலம் போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் இந்திய பெண் விமானி என்ற பெருமையை அவானி பெற்றுள்ளார்.இந்நிலையில், அமெரிக்காவின் முதல் பெண் போர் விமானியும் தற்போதைய எம்.பியுமான மெக்சாலி, அவானிக்கு டிவிட்டர் மூலம் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளி்யிட்டுள்ள பதிவில், ‘ இந்தியாவின் கண்ணாடி கூரையை உடைத்துக்கொண்டு, வானத்தை தொட்டுள்ள முதல் பெண் போர் விமானி அவானி சதுர்வேதிக்கு எனது பாராட்டுக்கள். இதுபோல பல பெண்கள் நம்முடைய சாதனையில் கைகோர்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை