பேச்சுவார்த்தை தோல்வி : மார்ச் 1 முதல் ஸ்டிரைக் உறுதி

தினமலர்  தினமலர்
பேச்சுவார்த்தை தோல்வி : மார்ச் 1 முதல் ஸ்டிரைக் உறுதி

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் டிஜிட்டல் சேவை வழங்கும் கியூப் மற்றும் யுஎப்ஓ நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை குறைப்பது, அல்லது அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வற்காக வருகிற மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிலிம் சேம்பர் நிர்வாகிகள், மாநில திரைப்பட சங்க நிர்வாகிகள் ஆகியோர் கியூப், யுஎப்ஓ நிறுவனங்களுடன் ஐதராபாத், சென்னையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து பெங்களூருவில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மார்ச் 1 முதல் புதிய படங்கள் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாக்கள் அனைத்தும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

மூலக்கதை