துபாயில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த சாகச பயண கம்பிப்பாதை
துபாய்: துபாயில் சாகசம் புரிவதற்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிப்பாதை, சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. உயரமான கட்டிடங்கள் இடையே ஆயிரம் மீட்டர் தூரத்துக்கு இந்த கம்பிப்பாதை நிறுவப்பட்டுள்ளது. இந்த சாகச கம்பிப்பாதையில் பயணிப்பவர்கள், துபாய் நகரின் பிரம்மாண்டத்தையும், பிரம்மாண்டமான கட்டிடங்களையும் பறவைப்பார்வையில் பார்த்து ரசிக்க முடியும்.அதாவது, கம்பியின் ஒரு முனையிலிருந்து பிரத்யேக பாதுகாப்பு அம்சங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் சாகசப் பிரியர்கள், 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு முனையிலிருந்து எதிர்முனைக்கு பயணிக்க முடியும். இந்த அந்தர சாகசப்பயணம் துபாய்க்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் சாகசப் பிரியர்களை ஈர்த்துள்ளது.