லாஸ் ஏஞ்சல்ஸ் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து : தீயை அணைக்க 100 தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

தினகரன்  தினகரன்

வாஷிங்க்டன் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள  3 மாடி கட்டிட குடியிருப்பில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென தீ கட்டிடம் முழுக்க பரவியதால் அப்பகுதியே  நெருப்புக்கோளம் போல காட்சி அளித்தது. இந்த தீ விபத்து காரணமாக புகை மண்டலம்  ஏற்பட்டதால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தீயை அணைக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.தீ விபத்து நடந்த கட்டிடத்திற்குள் இருந்து ஒருவர் சுய நினைவற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கட்டிடத்திற்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை ஒரு தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனிடையே இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை