பிரிட்டனில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்

தினமலர்  தினமலர்

லண்டன்: பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் நின்றிருந்த, சீக்கியரின் தலைப்பாகையை கழற்றி, அவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தியவரை, போலீசார் தேடி வருகின்றனர்.பஞ்சாபைச் சேர்ந்தவர், ரவ்னீத் சிங், 37. இவர், பிரிட்டன், எம்.பி.,யும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான, தன்மன்ஜீத் சிங் தேசியை சந்திப்பதற்காக, நேற்று முன்தினம், பார்லிமென்ட் வந்தார். பார்லி., வளாகம் போர்ட்குல்லிஸ் ஹவுஸ் என்ற கட்டடத்தின் வாசலில், வரிசையில் நின்று கொண்டிருந்தார்.அப்போது, திடீரென அங்கு வந்த ஒருவர், ரவ்னீத்தை நோக்கி, சத்தம் போடத் துவங்கினார். அவர் என்ன சொல்கிறார் என, புரியவில்லை. அவர், கோபமாக ஏதோ பேசியபடி, ரவ்னீத் சிங்கை நெருங்கினார். சட்டென, அவரது தலைப்பாகையை பிடித்து இழுத்தார். இதில், தலைப்பாகை பாதி அவிழ்ந்தது.அங்கிருந்தவர்கள் உதவியுடன், அந்த நபரை, ரவ்னீத் சிங் சமாளித்தார். இந்த சம்பவத்துக்கு, எம்.பி., தன்மன்ஜீத் சிங் கண்டனம் தெரிவித்ததுடன், இனவெறித் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ய வேண்டும் என்றும், பிரிட்டன்

அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை