பெருவில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 44 பேர் பலி..!

தினகரன்  தினகரன்

பெரு நாட்டில் இரண்டு அடுக்குகளை கொண்ட பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 44 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்திற்குள்ளான பேருந்து உயரமான மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. பல உயிர்களை பலி வாங்கியுள்ள இந்த  கொடூர விபத்து Ocona பகுதியில் அமைந்துள்ள Panamericana Sur நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. மேற்கண்ட  நெடுஞ்சாலையின் ஆபத்தான வளைவு பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் பேருந்து நசுங்கி சின்னாபின்னமாகியுள்ளது வெளியான புகைப்படங்களில் காண முடிகிறது.விபத்து நடந்த பகுதிக்கு அருகாமையில் ஆறு ஒன்று ஓடுவதால், பல உடல்கள் அந்த ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு குழுவினர் ஆற்றில் குதித்து உடல்களை மீட்டு கரை சேர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் இதே போன்ற பேருந்து விபத்தில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழந்த சம்பவம் நினைவுகூறத்தக்கது.

மூலக்கதை