சிங்கப்பூரில், 'சில்மிஷம்' : 3 இந்தியர்களுக்கு சிறை

தினமலர்  தினமலர்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில், 13 வயது சிறுமியுடல் பாலியல் உறவில் ஈடுபட்ட, மூன்று இந்தியர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், சட்டதிட்டங்கள் மிக கடுமையாக பின்பற்றப்படுகின்றன. இங்கு, 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டால், 20 ஆண்டு வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி வழங்கப்படும். இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த, கில் குர்ஜந்த் சிங், 23; சுர்ஜித் சிங், 29; ஜக்ராஜ் சிங், 33; ஆகியோர், சிங்கப்பூரில் கட்டட தொழிலாளிகளாக வேலை செய்கின்றனர்.இவர்கள், 2016ல், சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில், சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, தோழியருடன் அங்கு வந்த, 13 வயது சிறுமியுடன் மூன்று பேருக்கும்பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமியை அழைத்துச் சென்று, ஓட்டலில் அறை எடுத்து தங்கி, மூவரும் உறவு கொண்டுள்ளனர்.இதற்கு அந்த சிறுமியும், அனுமதித்துள்ளார். ஆனாலும், சிறுமியின் தாயார் கொடுத்த புகாரை அடுத்து, மூன்று இந்தியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதில், குர்ஜந்த் மற்றும் சுர்ஜித் ஆகியோருக்கு 15 மாதங்களும், ஜக்ராஜுக்கு எட்டு மாதங்களும் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

மூலக்கதை