இந்திய அணி 188 ரன் குவிப்பு

தினமலர்  தினமலர்
இந்திய அணி 188 ரன் குவிப்பு


செஞ்சூரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது 'டுவென்டி-20' போட்டியில் மணிஷ் பாண்டே, தோனி அரை சதம் விளாச, இந்திய அணி 20 ஓவரில் 188 ரன் குவித்தது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. இரண்டாவது போட்டி செஞ்சூரியனில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுமினி 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் தசைபிடிப்பால் அவதிப்படும் பும்ரா நீக்கப்பட்டு, ஷர்துல் தாகூர் வாய்ப்பு பெற்றார்.

மணிஷ் பாண்டே விளாசல்

இந்திய அணிக்கு ரோகித் டக்-அவுட்டானார். டாலா 'வேகத்தில்' கேப்டன் கோஹ்லி (1) சிக்கினார். டுமினி 'சுழலில்' ஷிகர் தவான் (24) அவுட்டானார். ரெய்னா 31 ரன்கள் எடுத்தார். பின், இணைந்த மணிஷ் பாண்டே, தோனி சிறப்பாக செயல்பட்டனர். இருவரும் அரை சதம் விளாசி, 'ஸ்கோரை' உயர்த்தினர். இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே (79), தோனி (52) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை