தமிழர்களை அச்சுறுத்திய பிரிகேடியரின் நிலை!
பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ, கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சுதந்திர நாளன்று, லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை நோக்கி பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ கழுத்தை அறுத்து விடுவேன் என்பது போல சைகையில் எச்சரித்திருந்தார்.
இதையடுத்து, கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோவை பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து உடனடியாக இடைநிறுத்துவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக அவரது இடைநிறுத்தத்தை ரத்துச் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில், பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ இன்று கொழும்புக்குத் திரும்பியுள்ளார்.
அவர் திருப்பி அழைக்கப்பட்டமைக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை என கூறப்படுகின்றது.