வீதி விபத்து! - ஜனவரியில் பலி எண்ணிக்கை குறைந்தது!!

PARIS TAMIL  PARIS TAMIL
வீதி விபத்து!  ஜனவரியில் பலி எண்ணிக்கை குறைந்தது!!

கடந்த 2017 ஆம் அண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018 ஜனவரியில் வீதி விபத்துக்களில் பலியானவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளது. 
 
2018 ஆம் ஆண்டு ஜனவ்ரி மாதத்தில் நாடு முழுவதும் 235 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2017 ஆம் ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 20 பேர்களால் (7.8 வீதத்தால்) குறைந்துள்ளது என வீதி கண்காணிப்பாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்கள். கடந்த மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக ஒவ்வொரு ஜனவரியிலும் எண்ணிக்கை அதிகரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை 2017 ஆம் ஆண்டில் மொத்தமாக 3,693 பேர் நாடுமுழுவதும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். 
 
தவிர, வரும் ஜூலை மாதத்தில் இருந்து 90 கிலோமீட்டர்கள் வேகக்கட்டுப்பாடு கொண்ட வீதிகளுக்கு 80 கி.மீ வேகமாக குறைக்கப்படும். இந்தனால் மேலும் விபத்துக்களின் எண்ணிக்கியும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை