விவசாய கண்காட்சி! - மூன்று நாட்கள் வருகை தரும் எத்துவா பிலிப்!!
இந்த வருடத்தின் விவசாய கண்காட்சிக்கு பிரதமர் எத்துவா பிலிப் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வருகை தரவுள்ளார். பெப்ரவரி 24 ஆம் திகதி இந்த கண்காட்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.
விவசாய கண்காட்சி (Salon de l'Agriculture) பெப்ரவரி 24 ஆம் திகதி Porte de Versailles ஆரம்பிக்கிறது. பிரதமர் எத்துவா பிலிப் அடுத்தவார செவ்வாய்க்கிழமை, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக வருகை தர உள்ளார். தினமும் விவசாயிகளை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ஆரம்பிக்கும் முதல் நாள் சனிக்கிழமை வருகை தருகிறார். அதேவேளை, எலிசே மாளிக்கைக்கு 1000 விவசாயிகள் வருகை தர உள்ளதாகவும், மக்ரோனுடன் மிகப்பெரும் சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.