தொடரூந்து நிலையம் முன்பாக ஒருவரை ஒருவர் தாக்கி - இருவர் பலி!!

PARIS TAMIL  PARIS TAMIL
தொடரூந்து நிலையம் முன்பாக ஒருவரை ஒருவர் தாக்கி  இருவர் பலி!!

வீடற்ற இரு நபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில், இருவருமே பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. 
 
தாக்கப்பட்டற்குரிய காரணங்கள் எதுவும் அறியமுடியவில்லை. நேற்று திங்கட்கிழமை நண்பகலுக்கு பின்னதாக 
Toulouse நகரின் Matabiau தொடரூந்து நிலையத்துக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவரும் வீடற்றவர்கள் எனவும், கத்தி ஒன்றின் மூலம் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் சண்டையிடுவதை தொடர்ந்து தீயணைப்பு படையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னரே இருவரும் உயிரிழந்துள்ளார்கள் என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். 
 
காவல்துறையினர் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த ஐவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இருவரும் முப்பது வயதுகளை கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
 

மூலக்கதை