மாணவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்! - ஆசிரியர் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
மாணவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்!  ஆசிரியர் கைது!!

கடந்த ஜனவரி 29 ஆம் திகதியில் இருந்து பணிநிறுத்தம் செய்யப்பட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Oise இல், Saint-Vincent de Senlis உயர்கல்வி பாடசாலையில் கற்பித்து வந்த ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பாலியல் துன்புறுத்தல் குற்றம் சாட்டப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், குற்றம் உறுதிசெய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார். 
 
முன்னதாக 2017 ஆம் ஆண்டு நவம்பரில் முதன் முறையாக ஆசிரியர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. தாதியார் ஒருவரால் இந்த குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை