கடன் நெருக்கடியால் திவாலாகும் ஏர்செல்.. 5000 ஊழியர்களின் நிலை என்ன..?
தென் இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தைக் கொண்டுள்ள டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்செல் அதிகளவிலான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடன் நெருக்கடியில் வர்த்தகத்தையும் சேவையும் முழுமையாகச் செயல்படுத்த முடியாத நிலைக்குத் தற்போது ஏர்செல் தள்ளப்பட்டுள்ளது.