பருத்தித்துறை கோவிலில் மர்ம நபர்கள் செய்த காரியம்!

PARIS TAMIL  PARIS TAMIL
பருத்தித்துறை கோவிலில் மர்ம நபர்கள் செய்த காரியம்!

பருத்தித்துறை துன்னாலையில் கோவிலுக்கு சென்ற முகமூடி அணிந்தோர் கோவில் செயலாளரைக் கடத்திச் சென்று தாக்கியதோடு வெட்டிக் காயப்படுத்திவிட்டு கைவிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
 
நேற்றுமாலை சுமார் 5.30 அளவில் குறித்த கோவலில் நிர்வாகக் கூட்டம் இடம்பெற்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
 
முகங்களைக் கறுப்புத் துணியால் மறைத்துக் கட்டியவாறு மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் 10 பேரே கடத்திச் சென்றனர். அந்தக் குழுவில் ஒருவர் பொலிஸிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர் என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
 
கடத்தப்பட்டவரைத் தேடியபோது துன்னலை முள்ளியில் அவர் காயங்களுடன் காணப்பட்டார்.  பின்னர் அவர் பருத்தித்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 
 
சம்பவம் தொடர்பில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் விசாரணை இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மூலக்கதை