தொடரூந்தின் கதவில் தொங்கிக்கொண்டு மூன்று கிலோமீட்டர்கள் பயணித்த நபர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
தொடரூந்தின் கதவில் தொங்கிக்கொண்டு மூன்று கிலோமீட்டர்கள் பயணித்த நபர்!!

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு மிக அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் தொடரூந்தின் வெளிப்புற கதவில் தொங்கிக்கொண்டு மூன்று கிலோ மீட்டர்கள் பயணித்துள்ளார். 
 
20.45 மணி அளவில் Rennes நிலையத்தில் இருந்து Brest நோக்கி செல்ல தொடரூந்தில் இருந்த நபர், சிகரெட் புகைப்பதற்காக தொடரூந்தை விட்டு இறங்கியுள்ளார். பின்னர் குறித்த நபர் வருவதற்குள் தொடரூந்தின் கதவுகள் மூடப்பட்டு தொடரூந்து புறப்பட, ஓடி வந்த நபர் தொடரூந்து கதவின் வெளிப்புறத்தை பற்றிக்கொண்டுள்ளார். 
 
அதைத்தொடர்ந்து, தொடரூந்து வேகமாக பயணித்துள்ளது. மூன்று கிலோ மீட்டர்கள் பயணித்த பின்னரே தொடரூந்துக்குள் இருந்த பயணி ஒருவரால் தகவல் தெரிவிக்கப்பட்டு தொடரூந்து அவசரமாக நிறுத்தப்பட்டது. பின்னர் குறித்த நபரை TER ஏற்றிக்கொண்டு பயணித்தது. தொடரூந்துக்கும் வெளிப்புற தூண்களுக்கும் மிகச்சிறிய இடைவெளியே இருந்த நிலையில், குறித்த நபர் மிக ஆபத்தான செயலில் ஈடுபட்டிருந்ததால் SNCF வழக்கு தொடர்ந்துள்ளது.

மூலக்கதை