தாயின் கண்ணெதிரே குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

PARIS TAMIL  PARIS TAMIL
தாயின் கண்ணெதிரே குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

ரஷ்யாவில் தன்னுடைய அழகிய குழந்தைகளை தாய் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது அருகிலிருந்த பள்ளத்தில் குழந்தை விழுந்து விபத்துக்குள்ளானது.
 
ரஷ்யாவின் Alder நகரில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு தாய் ஒருவர் தன் இரு குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
 
அங்கே இருவரையும் வைத்து மொபைலில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அருகிலுள்ள சிறு ஓட்டை வழியே குழந்தை தவறி விழுந்தது.
 
உடனடியாக பதறித்துடித்த தாய், குழந்தை காப்பாற்றுமாறு கதறியுள்ளார்.
 
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
 
நெற்றியில் பலத்த அடி விழுந்ததுடன், மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
 
 
 

மூலக்கதை