ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு இன்று தீர்ப்பு

தினமலர்  தினமலர்
ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு இன்று தீர்ப்பு

சென்னை: போரூர் சிறுமி, ஹாசினி கொலை வழக்கில், இன்று(பிப்.,19) தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

போரூர் அடுத்த மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர், பாபு. அவரது மகள், ஹாசினி, 6. இந்த சிறுமியை, 2017 பிப்., 5ல், அதே பகுதியைச் சேர்ந்த, தஷ்வந்த், 24, என்பவன், பாலியல் சித்ரவதை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றான். மாங்காடு போலீசாரால் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், ஜாமின் பெற்று வெளியே வந்தான். பின், அவன் தாய், சரளாவையும் கொலை செய்து, நகைகளுடன் மும்பைக்கு தப்பினான்.

தனிப்படை போலீசார், அவனை கைது செய்தபோது, போலீசாரின் பிடியில் இருந்து தப்பினான். அவனை, மீண்டும் போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.சிறுமி ஹாசினி கொலை வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால், தஷ்வந்தே வாதாடினான். இந்நிலையில், சிறுமி ஹாசினி கொலை வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

மூலக்கதை