முதல் 'டுவென்டி-20' போட்டி: இந்தியா அபார வெற்றி

தினமலர்  தினமலர்
முதல் டுவென்டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி

ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் 'டுவென்டி-20' போட்டியில் ஷிகர் தவான் அரை சதம் விளாச, இந்திய அணி 20 ஓவரில் 203 ரன் குவித்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுமினி 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் 'சுழல்' வீரர் குல்தீப் நீக்கப்பட்டு உனத்கட் இடம் பிடித்தார். ஒரு ஆண்டுக்குப்பின் மீண்டும் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தென் ஆப்ரிக்க அணியில் காயம் காரணமாக டிவிலியர்ஸ் இடம்பெறவில்லை. கிளாசன், டாலா அறிமுகமாகினர். 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் மட்டுமே எடுத்து 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மூலக்கதை