விமான விபத்தில் 10 வயது சிறுமி உட்பட மூவர் பலி!!
விமான விபத்தொன்றில் 10 வயது சிறுமி உட்பட மூவர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழ தெரிவித்துள்ளனர்.
கிழக்கு பிரான்சான jura மாவட்டத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அப்பகுதியின் ஜோந்தாமினர்கள் தெரிவிக்கும் போது, நேற்று சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டு, விமானத்தின் உடைந்த துண்டு பாகங்கள் நேற்று நள்ளிரவு வேளையில் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது. தேசிய காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த விபத்தில் தம்பதியினர் இருவரும், அவர்களின் 10 வயது மகளும் கொல்லப்பட்டுள்ளனர்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Toussus-le-Noble விமானத்தளத்தில் இருந்து ஆல்ப் நோக்கி விமானம் சனிக்கிழமை நண்பகலில் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.