கொழும்பு சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எரிந்த நிலையில் மீட்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
கொழும்பு சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எரிந்த நிலையில் மீட்பு!!

கொழும்பு செல்வதாகக் கூறிச் சென்றவர் ஏழு தினங்களின் பின்னர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 
இந்த ச் சம்பவம் எழுதுமட்டுவாழில் நடந்துள்ளது. யாழ்.மிருசுவில் பழைய வாய்க்காலைச் சேர்ந்த செல்வரத்தினம் சுரேஸ்குமார் ( வயது 56 ) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
இவர் கடந்த 11ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருந்த திருமண நிகழ்வு ஒன்றுச் செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார். அவர் கொழும்பு வரவில்லை என்று 13ஆம் திகதி உறவினர்கள் அறிந்தனர். கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்ததுடன், அவரைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
 
நேற்றுக் காலை கிடைத்த தகவலில் அடிப்படையில் எழுதுமட்டுவாழ், நாகர்கோயில் வீதியில் உள்ள கண்டல் காட்டுப் பகுதியில் அவர் எரிந்த நிலையில் சடமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உடல் மிருகங்களால் சேதமாக்கப்பட்டிருந்தது.
 
இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் நேற்று பொலிஸார் நீதிமன்றப் பதில் நீதிவான் செ.கணபதிப்பிள்ளை முன்னிலையில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். 
 
அறிக்கையைப் பார்வையிட்ட பதில் நீதிவான் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
 
சடலத்தை யாழ்.போதனா மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அங்குள்ள சட்ட மருத்துவ அதிகாரி மூலம் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேணடும் என்றும், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை