ரஜினி, கமல்...கவுதமி ஆதரவு யாருக்கு?

தினமலர்  தினமலர்
ரஜினி, கமல்...கவுதமி ஆதரவு யாருக்கு?

நடிகை கவுதமி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று (பிப்.,18) சாமி தரிசனம் செய்தார். அப்போது மக்கள் நலனுக்காக அவர் ஆண்டாள் பெயரில் அர்ச்சனை செய்தார்.

கோயிலுக்கு வெளியே பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கவுதமி பதிலளித்தார். அதன் விபரம் :

* ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வருவதாகவும், கட்சி துவக்குவதாகவும் அறிவித்துள்ளனர். நீங்கள் பிரசாரத்திற்கு வந்தால் உங்களின் ஆதரவு யாருக்கு இருக்கும்?

ரொம்ப சீக்கிரமாக இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என்னிடம். கட்சி துவங்கி, கொள்கை, என்னென்ன செய்யப் போகிறார்கள், என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளனர் என்பதை முதலில் வெளியிடட்டும். அதற்கு பிறகு தான் நான் மட்டுமல்ல, மக்களாக நாம் அனைவரும் முடிவு எடுக்க முடியும். இதுவரை அவர்களின் கொள்கைகள் பற்றிய விபரம் ஏதும் தெரியவில்லை. பார்க்கலாம். நீங்கள் எப்படி அவற்றை தெரிந்து கொள்ள காத்திருக்கிறீர்களோ, அதே போல் நானும் காத்திருக்கிறேன்.

* மறைந்த முதல்வர் ஜெ.,வின் மரணம் குறித்த விசாரணையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இது பற்றி ஏற்கனவே பலமுறை நான் கருத்து கூறி விட்டேன். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது அல்லவா, அது முடியட்டும்.

இவ்வாறு கவுதமி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை