காணாமல் போயிருந்த பெண்ணின் சடலம் ஆற்றுக்குள் மீட்பு!

PARIS TAMIL  PARIS TAMIL
காணாமல் போயிருந்த பெண்ணின் சடலம் ஆற்றுக்குள் மீட்பு!

காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபட்டிருந்த பெண் ஒருவர், நான்கு நாட்களின் பின்னர் ஆறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
 
கடந்த புதன்கிழமை, 19 வயதுடைய எண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக Vosges இல் இருந்து வெளியாகும் பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. வேலைக்குச் செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்ட குறித்த பெண் அன்று நண்பகல் வேளையில் இருந்து காணாமல் போயுள்ளார். அவரின் தொலைபேசி செயற்படவில்லை எனவும், அவர் இறுதியாக பயணித்த மகிழுந்தையும் காணவில்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
பின்னர், Marie Arnold எனும் பெயருடைய குறித்த பெண்ணின் சடலம் ஆற்றுப்பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்றாம் நபர் தலையீடு எதுவும் இருப்பதாகவோ, விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்பதற்குரிய எந்த ஆதாரங்களோ கிடைக்கவில்லை என ஜோந்தாமினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது தற்கொலையாக இருக்கலாம் எனும் ரீதியில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக ஜோந்தாமினர்கள் தெரிவித்துள்ளனர். 
 

மூலக்கதை