பா-து-கலே - காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு!!

PARIS TAMIL  PARIS TAMIL
பாதுகலே  காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு!!

பா-து-கலேயில் உள்ள குடும்பம் ஒன்றில் இடம்பெற்ற சண்டையை தொடர்ந்து காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. அதிஷ்ட்டவசமாக காவல்துறையினருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. 
 
வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் நபர் ஒருவர், அவரது மனைவி மற்றும் மகனை துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவேன் என மிரட்டிக்கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற BAC அதிகாரிகள், வீட்டுக்குள் நுழைய முற்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த நபர், காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரிகள் யாரும் காயமடையவில்லை.
 
சம்பவத்தை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தவிர, அவரிடம் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை